/* */

சீர்காழி காவல் நிலைய வளாகத்தில் மூலிகை செடிகளை பராமரிக்கும் ஆய்வாளர்

சீர்காழி காவல் நிலைய வளாகத்தில் புதர்களை அகற்றி மூலிகை செடிகளை பராமரிக்கும் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

HIGHLIGHTS

சீர்காழி காவல் நிலைய வளாகத்தில் மூலிகை செடிகளை பராமரிக்கும் ஆய்வாளர்
X

மூலிகை செடிகளுக்கு தண்ணீர் விடும் ஆய்வாளர் மணிமாறன்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலைய ஆய்வாளராக மணிமாறன் பணியாற்றி வருகிறார். இவர் பணியில் சேர்ந்த நாள் முதல் காவல் நிலையத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.தற்போது காவல் நிலையத்தை சுற்றியுள்ள வளாகங்கள் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வளாகங்களில் உள்ள புதர்களை அகற்றி பூச்செடிகள் மற்றும் மூலிகை செடிகளை வளர்க்கும் பணியை துவக்கி செய்து வருகிறார்.

காவல் ஆய்வாளரின் இந்த சிறப்பான செயலை தொடர்ந்து சீர்காழி காவல் நிலைய காவலர்களும் ஆர்வமுடன் செடிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் காவல் நிலையம் நுழைவுவாயில் முதல் அனைத்து வளாகங்களும் பசுமையான சோலைவனமாக மாறி வருகிறது.தொடர் பணிகளுக்கு இடையே காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களின் இயற்கையைப் பராமரிக்கும் இந்த செயல் சீர்காழி நகர மக்களிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது

Updated On: 26 Dec 2021 5:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  2. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  3. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  4. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  5. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  6. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  9. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  10. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை