/* */

சீர்காழி அருகே தொகுப்பு வீட்டின் கூரை பெயர்ந்து விழுந்து ஒருவர் காயம்

சீர்காழி அருகே ராதாநல்லூர் தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் காயம் அடைந்தார்.

HIGHLIGHTS

சீர்காழி அருகே தொகுப்பு வீட்டின் கூரை பெயர்ந்து விழுந்து ஒருவர் காயம்
X

சீர்காழி அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 42.ராதாநல்லூர் கிராமத்தில் 20 க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன. கடந்த 1991 ஆம் ஆண்டு கட்டப்பட இந்த வீடுகள் தற்போது வரை 30 வருடங்களாக எந்தவித பராமரிப்பும் இன்றி சிதிலமடைந்து உள்ளது. இந்நிலையில் இக்கிராமத்தில் கூலி விவசாயி அறிவழகன் மனைவி யசோதாவுடன் வசித்து வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது தொகுப்பு வீட்டின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. இதனால் காயம் அடைந்த அறிவழகன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். அடுத்தடுத்து பெயர்ந்து விழுந்த காரையால் வீட்டில் இருந்த டி.வி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தன.

மேலும் இங்குள்ளதொகுப்பு வீடுகள் முழுவதும் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. சமீபத்தில் தூங்கிக்கொண்டு இருக்கும்போது மின்விசிறி பெயர்ந்து விழுந்து பெண் ஒருவர் தலையில் அடிபட்டு காயமான சம்பவமும் இந்த கிராமத்தில் நடைபெற்று உள்ளது.

இதில் வாழும் ஏழை மக்கள் உயிர் பயத்துடன் அருகில் குடிசை அமைத்தும்,வீட்டின் மீது தார்பாய்கள் கட்டியும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எப்பொழுது வேண்டுமானாலும் தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.எனவே தொகுப்பு வீடுகளை மறுசீரமைப்பு செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Updated On: 20 Oct 2021 5:38 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்