/* */

தனியார் அறக்கட்டளை மூலம் காவிரி கரையோரம் பனைவிதைகள் நடும் பணி தொடக்கம்

மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் வரை காவிரிகரை ஓரம் 1000 பனைவிதைகள் நடும் பணியை தனியார் அறக்கட்டளை தொடங்கியுள்ளது

HIGHLIGHTS

தனியார் அறக்கட்டளை மூலம் காவிரி கரையோரம் பனைவிதைகள் நடும் பணி தொடக்கம்
X

மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் வரை காவிரிகரை ஓரம் 1000 பனைவிதைகள் நடும் பணியை தனியார் அறக்கட்டளை தொடங்கியது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இயற்கை வளம், மண் வளம், சுற்றுச்சூழலை பாதுகாத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் முயற்சியாக காவிரிக்கரையோரம் ஆயிரம் பனை விதைகளை நடும் பணிகள் தொடங்கியது. மயிலாடுதுறையிலிருந்து காவிரி ஆறு சங்கமிக்கும் பூம்புகார் வரை ஆற்றுப்படுகையில் பனை விதைகளை நடும் முயற்சியில், ஜோதி பவுண்டேஷன் என்ற தனியார் அமைப்பினர் இன்று மயிலாடுதுறை நகரபகுதி காவிரி ஆற்றின்; கரை ஓரத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்டனர். தனியார் அமைப்பின் தலைவர்சேகர் தலைமையில், தமிழ்நாடு மக்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் நலச்சங்கம், ஸ்ரீஜெயின்சங்கத்தினர் கலந்து கொண்டனர். தனியார் அமைப்பின் இந்த முயற்சியில் பொதுமக்களும் தன்னார்வத்துடன் பங்கேற்று பனைமர விதைகளை நடும் பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 30 Aug 2021 11:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!