/* */

சுருக்குமடிவலை பிரச்னை: சீர்காழிக்கு வந்த 13 படகுகளை வெளியேற்ற போலீசார் நோட்டீஸ்

சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால் போலீசார் சீர்காழி பகுதியில் இருந்து படகுகளை வெளியேறுமாறு எச்சரித்துள்ளனர்.

HIGHLIGHTS

சுருக்குமடிவலை பிரச்னை: சீர்காழிக்கு வந்த 13 படகுகளை வெளியேற்ற போலீசார் நோட்டீஸ்
X

பாண்டிச்சேரியில் சுருக்குமடி மீனவர்கள் பிரச்னையால் சீர்காழிக்கு கொண்டு வந்த 13 படகுகளை வெளியேற்றபோலீஸார் எச்சரிக்கை நோட்டீஸ் அளித்துள்ளனர்.

பாண்டிச்சேரி அருகே நல்லவாடு மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி வீராம்பட்டினம் கிராம பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது என்று தடுத்த மற்றொரு தரப்பு மீனவர்களும் நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது.இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை செய்து சுமூக நடவடிக்கை மேற்கொண்டததால் மீனவர்கள் நடுகடலில் மோதலை விடுத்து மீனவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து இரு தரப்புக்கும் மீனவர்கள் கிராமத்திலும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. நல்லவாடு சுருக்கு மடிவலை மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக 13 படகுகளை மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பழையார், பூம்புகார் உள்ளிட்ட பகுதியில் உள்ள துறைமுகத்திற்கு எடுத்து வந்து நிறுத்தியுள்ளனர். இதன் காரணமாக இந்த பகுதியில் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால் மீன்வளத்துறை அதிகாரிகள், போலீசார் சீர்காழி பகுதியில் இருந்து படகுகளை வெளியேற்றுமாறு படகின் மீது நோட்டீஸ் அறிவிப்பு ஒட்டியதுடன் சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்

Updated On: 29 Aug 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  2. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  4. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  5. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  10. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?