/* */

மயிலாடுதுறை: கொலை வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள்சிறைத் தண்டனை

மயிலாடுதுறைஅருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள்சிறைத் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை: கொலை வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள்சிறைத் தண்டனை
X

ஆயுள் தண்டனை அடைந்த பிரகாஷ்.

மயிலாடுதுறை அருகே மாப்படுகை பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் சேகர்(58) விவசாயியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ்(49) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பான பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி அப்பகுதியில் உள்ள டீக்கடையில் சேகர் டீ குடித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கும், பிரகாஷ்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ் அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகு கட்டையை எடுத்து, சேகரை தாக்கியதில் அவர் படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் உயிரிழந்தார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜராகிய இவ்வழக்கில் நீதிபதி பன்னீர்செல்வம் கொலை குற்றவாளி பிரகாசுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் வித்து தீர்ப்பு வழங்கினார். மயிலாடுதுறையில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தொடங்கப்பட்டு முதல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து குற்றவாளி பிரகாசை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 18 Feb 2022 6:55 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  3. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  5. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  6. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  7. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  8. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  9. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  10. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!