/* */

குத்தாலம் அருகே சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்ட பெண்களால் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேறும் சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்ட போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

குத்தாலம் அருகே சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்ட பெண்களால் பரபரப்பு
X

குத்தாலம் அருகே சேறும் சகதியமான சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரம் ஊராட்சி வைகல் கிராமத்தில் உள்ள சாலை கடந்த 11 வருடங்களாக குண்டும் குழியுமாக உள்ளது. மழைபெய்தால் சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது. சாலையை செப்பனிடக்கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றியம் மற்றும் வருவாய் துறையினரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

சாலையை செப்பனிடாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வைகல் கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவரது வயலில் சம்பா நடவு செய்வதற்கு வெளியூரிலிருந்து வேலைக்காக வந்த பெண்கள் சாலை மிக மோசமாக இருப்பதை கண்டு வயல்போல் சாலை உள்ளதாக கூறி நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளுக்கு உணர்த்தும் விதமாக சேறும், சகதியுமாக உள்ள சாலையில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி நாற்றுகளை நடவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி கிராமமக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது.


Updated On: 22 Oct 2021 5:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  2. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  3. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  7. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  9. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  10. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?