/* */

தரங்கம்பாடி அருகே சந்திரபாடி கடலில் மாயமான மீனவ இளைஞர் உடல் மீட்பு : போலீசார் விசாரணை

மயிலாடுதுறை, சந்திரபாடி கடலில் மாயமான மீனவ இளைஞர் உடல் மீட்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

தரங்கம்பாடி அருகே சந்திரபாடி கடலில்  மாயமான மீனவ இளைஞர் உடல் மீட்பு : போலீசார் விசாரணை
X

மயிலாடுதுறையில் காணாமல் போன மீனவ இளைஞர் உடல் மீட்கப்பட்டு விசாரணை நடத்தும் போலீசார். 

தரங்கம்பாடி அருகே சந்திரபாடி கடலில் மீன் பிடிக்கும்போது மாயமான மீனவ இளைஞர் உடல் மீட்கப்பட்டது. கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சந்திரபாடி மீனவர் காலனியை சேர்ந்தவர் வீரகாளி மகன் தீபக்(20). இவர் சக மீனவரான சாமி சுந்தரகுமார் ஆகியோருடன் சேர்ந்து புதன்கிழமை அதிகாலை 3 மணி அளவில் சந்திரபாடியிலிருந்து மத்தி மீன் பிடிக்க கடலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஒரு நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது தீபக்கை காணவில்லை என மற்ற மீனவர்கள் கடலில் தேடியுள்ளனர. மீனவர் மாயமானது குறித்து தரங்கம்பாடி கடலோர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கடலில் மீனவரை தேடிவந்தனர்.

இன்று அதிகாலை சந்திர பகுதி மீனவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர். அப்போது தரங்கம்பாடி அருகே மீனவர் தீபக்கின் உடல் நடு கடலில் மிதந்து வந்ததாக கூறப்படுகிறது. மீனவர்கள் தீபக்கின் உடலை படகில் கரைக்கு எடுத்து வந்தனர். மீனவரின் உடலை பார்த்து கிராமமக்கள் கதறி அழுதனர். தகவலறிந்த தரங்கம்பாடி கடலோர காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 18 Jun 2021 7:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  2. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  3. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  4. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  5. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  6. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  7. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  8. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  9. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  10. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...