/* */

மயிலாடுதுறையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நூலகம் கட்டுமான பணிக்கு பூமிபூஜை

மயிலாடுதுறை நகராட்சி சார்பில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நூலகம் கட்டுமான பூமிபூஜை போடப்பட்டது.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நூலகம் கட்டுமான பணிக்கு பூமிபூஜை
X

நூலகம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.

மயிலாடுதுறையில் நகராட்சி சார்பில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது. நகராட்சி ஆணையர் பாலு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கலந்துகொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜையை தொடங்கிவைத்தார்.

தருமபுரம் சாலை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி எதிர்புறம் முதல் மாடியுடன் 4 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட உள்ள இந்த கட்டிடத்தில் ஒரே நேரத்தில் 200 பேர் அமர்ந்து படிக்கும் வகையில் சென்னையிலுள்ள கன்னிமாரா நூலகத்தில் உள்ள நூல்களை கூட இங்கிருந்து கம்ப்யூட்டர் மூலம் நகலெடுத்து படிக்கும் வகையில் அதிநவீன வசதியுடன் கட்டப்பட உள்ளதாகவும், ஐ.ஏ.எஸ். முதல் சாதாரண அலுவலர் தேர்வுக்கான அனைத்து நூல்களும் இங்கு அமையப் பெற உள்ள நூலகத்தில் இடம் பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நகராட்சி பொறியாளர் சனல்குமார் உள்ளிட்ட நகராட்சிதுறை அதிகாரிகள் முன்னாள் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Jan 2022 3:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்