/* */

ஆக்சிஜன் பற்றாக்குறை 7 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை:- ஆக்சிஜன் தேவைப்படும் 7 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ஆக்சிஜன் பற்றாக்குறை 7 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 210 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினந்தோறும் திருச்சியிலிருந்து 30 ஆக்சிஜன் சிலின்டர் வரவழைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வரவேண்டிய ஆக்சிஜன் சிலின்டர் வராததால் ஆக்சிஜன் படுக்கையில் சிகிச்சைபெற்று வந்த 31 நோயாளிகளுக்கு கையிருப்பில் உள்ள 12 ஆக்சிஜன் சிலின்டர்கள் மற்றும் 15 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் குறைந்த அளவில் ஆக்சிஜன் தேவைப்பட்ட 7 நோயாளிகள் நாகப்பட்டிணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இரவு 90 ஆக்சிஜன் சிலின்டர்களும் நாளை 30 ஆக்சிஜன் சிலின்டர்களும் வந்துவிடும் என்பதால் தொடர்ந்து 4 நாட்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாது என்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறினர்.

Updated On: 20 May 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  3. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  4. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  5. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  6. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  7. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  8. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  9. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  10. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்