/* */

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

தற்போது, குறுவை அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை.

HIGHLIGHTS

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள்  போராட்டம்
X

மயிலாடுதுறை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 

மயிலாடுதுறை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்.

மயிலாடுதுறை தாலுகா குளிச்சார் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. ஆண்டுதோறும் நெல் அறுவடை பருவத்தில் திறக்கப்படும் இந்த நிலையம், கடந்த சம்பா பருவம் வரை செயல்பட்டு வந்துள்ளது. ஆனால், தற்போது, குறுவை அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை.

இதனால், விவசாயிகள் கழனிவாசலில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல்மணிகளை கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் குளிச்சார் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில், நெல் விற்பனை செய்யும் குளிச்சார், மன்னம்பந்தல், செருதியூர் உள்ளிட்ட 5 கிராம மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இதுகுறித்து, துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க ஏற்பாடு செய்யப்படாத காரணத்தால் ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள், நெற்கதிர்களுடன் மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில் மன்னம்பந்தல் கடைவீதியில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, குளிச்சார் ஊராட்சியில் விரைவில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 26 Aug 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  4. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  5. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  6. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  7. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  10. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...