/* */

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து, மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணியை கட்டி எதிர்ப்புப் போராட்டம்.

HIGHLIGHTS

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ்   போராட்டம்
X

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து மயிலாடுதுறையில்காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணியை கட்டி எதிர்ப்புப் போராட்டம்.

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்வதாக நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையொட்டி இன்று மாநிலம் முழுவதும் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து அறவழி போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சியின் தலைமை நேற்று அறிவித்தது.

அதன்படி மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று வாயில் வெள்ளை துணியை கட்டி நின்றவாறு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினருமான ராஜகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் வாயில் வெள்ளை துணியை கட்டியவாறு நகர காங்கிரஸ் அலுவலகமான காமராஜர் மாளிகை முன்பு நின்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Updated On: 20 May 2022 2:25 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்