/* */

ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதைக் கண்டித்து குடும்பத்துடன் தர்ணா

கோயில் திருவிழாவில் ஒலிபெருக்கி மூலம் இந்த குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்

HIGHLIGHTS

ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதைக் கண்டித்து குடும்பத்துடன் தர்ணா
X

ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துவிட்டதைக் கண்டித்து சீர்காழி தாலுகா அலுவலக வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கீழமூவர்க்கரை கிராம மக்கள்.

சீர்காழி அருகே கீழமூவர்க்கரை கிராமத்தை சேர்ந்த 6 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதை கண்டித்து, அந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் தாலுகா அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீர்காழி அருகே கீழமூவர்க்கரை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் நிலவன். இவருடன் பிறந்த கர்ணன், ஜெயக்குமார், மாதவன், முரளி, ராஜா ஆகிய 5 சகோதரர்கள் உள்ளனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் அமைந்துள்ள கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வெண்கலத்தில் ஆன படிக்கட்டு அமைத்து, அதில் நிலவன் உபயம் என தனது பெயரை பொறித்துள்ளார் .இது தொடர்பாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊர் முக்கியபிரமுகர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், பெயர் பொறித்து வைக்கக் கூடாது என கூறியுள்ளனர். இப்பிரச்னை காரணமாக நிலவன் , கர்ணன், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். மேலும், இந்த ஆறு குடும்பத்துடன் யாரும் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளக்கூடாது. இதனை மீறினால், ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் கீழமூவர்க்கரையில் உள்ள கடைக்காரர்கள் அத்தியாவசிய பொருட்களை அவர்களுக்கு வழங்கக் கூடாது என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்னர் நடந்த கோயில் திருவிழாவில், ஒலிபெருக்கி மூலம் ஆறு குடும்பங்களின் பெயரைப் படித்து, இவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள கூடாது என அறிவித்தனர். இதனால் மன உளைச்சலுக்குள்ளான ஆறு குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் சீர்காழி தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்து வட்டாட்சியரிடம் மனு அளித்த பின்னர், அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ள கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள ஊரார்கள் தங்களை அனுமதிக்க வேண்டும். இல்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ல்வதை தவிர வேறு வழி இல்லை என தெரிவித்தனர்.

Updated On: 26 Aug 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்