/* */

ஊழியர்களுக்கு கொரோனா: சீர்காழியில் 2 வங்கிகள் மூடல்

சீர்காழி தாலுகாவில் வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இரண்டு வங்கிகள் மூடப் பட்டன.

HIGHLIGHTS

ஊழியர்களுக்கு கொரோனா: சீர்காழியில் 2 வங்கிகள் மூடல்
X

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது. மேலும் அனைத்து வங்கிகளும், மதியம் 2 மணிவரை மட்டும் இயங்குவதற்கு, கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், சீர்காழி தாலுகாவில் இயங்கி வரும் இரண்டு வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சீர்காழியில், இந்தியன் வங்கி கிளையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கும், திருமுல்லைவாசல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அந்தந்த வங்கி நிர்வாகங்கள், வங்கிகளை உடனடியாக மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அந்த அந்த வங்கிகளை சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணிகளுக்காக, வங்கி இன்று செயல்படாது என அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. இதனை அறியாமல் வங்கிகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Updated On: 4 May 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  2. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  7. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  9. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  10. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...