/* */

சீர்காழியில் 2 குழந்தைகளை கொன்று விட்டு தூக்கில் தொங்கிய தாய்

சீர்காழியில் 2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தூக்கில் தொங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

சீர்காழியில் 2 குழந்தைகளை கொன்று விட்டு  தூக்கில் தொங்கிய தாய்
X

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி என்.எஸ்.பி. நகரில் உள்ள குடியிருப்பில் வாடகைக்கு குடி இருந்தவர் கார்த்திக். லாரி ஓட்டுநரான கார்த்திக் அவரது மனைவி பாரதி இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாரதி தனது தாயாருக்கு போன் செய்து குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவரது தாயார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அப்போது உள்ளே சென்றபோது இரண்டு குழந்தைகளையும் தூக்கில் தொங்க வைத்து விட்டு பாரதி தனியே தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் 3 பேரின் உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்சினை காரணமாக 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. பாரதியின் கணவர் கார்த்திக் வெளிமாநிலத்தில் பணிக்கு சென்று உள்ள நேரத்தில் நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 14 March 2022 1:55 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  7. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  8. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  9. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!