/* */

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் வேட்புமனு உள்ளதா நீதிபதிகள் கேள்வி

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் அமைந்துள்ளதா என கேள்வி எழுப்பினர்

HIGHLIGHTS

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் வேட்புமனு உள்ளதா நீதிபதிகள் கேள்வி
X

பைல் படம்

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு மீது தேர்தல் ணையம் நடத்தும் ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து விபரங்கள், வழக்கு மற்றும் தண்டனை விபரங்கள், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .

ஆனால் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வடிவில் இருந்தது .இதில் வேட்பாளர் வாழ்க்கை துணை மற்றும் வேட்பாளரை சார்ந்தவர்களின் கடந்த 5 வருட வருமானம், வருவாய் ஆதாரங்கள் குறித்த விவரங்கள் அரசின துறைகளில் எடுக்கப்படும் ஒப்பந்தங்கள் குறித்த விவரங்கள் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்த விவரங்கள் மற்றும் ஆதார் எண் ஆதார் முகவரி போன்ற விவரங்கள் கூறப்படவில்லை.எனவே மேற்கூறிய விவரங்களை குறிப்பிட்டு பிரமாண பத்திரத்தில் உரிய மாறுதல்கள் செய்ய வேண்டும்.

போட்டியிடும் வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் அது குறித்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்த உத்தரவிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அதனை 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அமல்படுத்தியது . ஆனால் ஏற்கெனவே நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வில்லை.

ஆகவே அந்த உத்தரவுகளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமல்படுத்தவும் அதுவரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என இடைக்கால உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் தரவும் அதனை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த இந்த மனு மீது உள்ள வழக்கானது நீதிபதிகள் புஷ்பா ,சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் தரப்பில் இது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை நகராட்சி தேர்தல்க்கானது அல்ல ?என தெரிவிக்கப்பட்டது .

அதற்கு நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் வேட்புமனு உள்ளதா என கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணையம் தரப்பில் இதுகுறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் வழக்கை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Updated On: 8 Jan 2022 12:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!