/* */

கோடநாடு வழக்கு: கைதான இருவருக்கு நவ.22 வரை நீதிமன்றக்காவல்

கோடநாடு வழக்கு விசாரணையில், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இருவரையும், நவ.22 வரை நீதிமன்ற காவலில் வைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.

HIGHLIGHTS

கோடநாடு வழக்கு: கைதான இருவருக்கு நவ.22 வரை நீதிமன்றக்காவல்
X

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மறுவிசாரணை தொடங்கப்பட்டதில் இருந்து சாட்சியங்களிடமும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமும் 5 தனிப்படை கொண்ட போலீசார், உதகையில் உள்ள பழைய எஸ்பி அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மறு விசாரணையில், கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்டு, கார் விபத்தில் இறந்து போன கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர், போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் இருவருக்கும், நவம்பர் 8 இன்று வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா, இருவருக்குமான நீதிமன்ற காவலை நவ. 22 ம் தேதி வரை வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இவர்கள் இருவருக்குமான ஜாமின் மனு மீதான விசாரணை, நாளை மறுநாள் நவம்பர் 10 க்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே நவ 8 வரை உள்ள இடைபட்ட நாட்களில், இவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு இருவரையும் போலீஸ் காவலில் 11 நாட்கள் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 8 Nov 2021 7:38 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!