/* */

கொரோனா விதிமீறல் : கமல்ஹாசனிடம் விளக்கம்கோர அரசு முடிவு

கொரோனா நடைமுறையை மீறிய கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கொரோனா விதிமீறல் : கமல்ஹாசனிடம் விளக்கம்கோர அரசு முடிவு
X

கமல்ஹாசன்

நடிகரும், மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனுக்கு, கொரொனா தொற்று அறிகுறி தென்பட்டது. இதை தொடர்ந்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில், கடந்த மாதம் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து அந்த மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், தொற்றில் இருந்து முழுமையாக மீண்டார். இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பினார்.

இதனிடையே, வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என்று, மருத்துவர்கள் கமல்ஹாசனை அறிவுறுத்திய நிலையில், அவ்வாறு இல்லாமல் பொதுநிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இது , கொரோனா நடைமுறைகளை மீறிய செயல் என்று சர்ச்சைகள் எழுந்தன.

இது குறித்து, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், பொது நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்றது குறித்து, சுகாதாரத்துறை சார்பில் உரிய விளக்கம் கேட்கப்படும். மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலும், அதன்பின் 7 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை என்று அவர் தெரிவித்தார்.

Updated On: 6 Dec 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!