/* */

கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும்

கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் நீதிமன்றத்தில் உறுதி தெரிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும்
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 23 மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுவிட்டதாகவும், திருநெல்வேலி, நாகப்பட்டினம், நாமக்கல் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மார்ச் 31 ஆம் தேதிக்குள் மாவட்ட குழுக்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள 11 மாவட்டங்களில் மே மாத இறுதிக்குள் மாவட்ட குழுக்கள் நியமிக்கப்படும் என உறுதி தெரிவிக்கப்பட்டது.

தை பதிவு செய்த நீதிபதிகள், மே மாதத்துக்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட குழுக்கள் நியமிக்கப்படாவிட்டால் அறநிலையத் துறை செயலாளரும், ஆணையரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி வரும் என எச்சரித்தனர். மேலும், மாவட்ட குழுக்கள் எத்தனை நாட்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும் என அறநிலையத் துறை தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும், தவறினால், அறங்காவலர் நியமன பணிகளை கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்படுவார் எனவும் தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 5 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மாவட்ட குழுக்களில் அரசியல் கட்சியினர் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், அரியலூர் மாவட்ட குழுவில் இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அரசியல் கட்சியை சேர்ந்த கடவுள் பக்தி உள்ளவரை நியமிக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்து அல்லாதவர் நியமிக்கப்பட்டு இருந்தால், அதை எதிர்த்து தனியாக தான் வழக்கு தொடர முடியும் எனவும், இந்த வழக்கில் விசாரிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

Updated On: 23 March 2023 11:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  5. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  6. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  7. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  8. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  9. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  10. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி