/* */

24,344 ஆரம்ப பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை: பேரவையில் ஆளுநர் ரவி உரை

தமிழகத்தில், 24,344 ஆரம்ப பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை; ஆசிரியர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி அளிக்கப்படும் என்று ஆளுனர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

24,344 ஆரம்ப பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை: பேரவையில் ஆளுநர் ரவி உரை
X

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம், இன்று காலை தொடங்கியது. இதில் ஆளுனர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். வணக்கம் என தமிழில் சொல்லி உரையை தொடங்கிய ஆளுனரின் உரையில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

முக்கிய அறிவிப்புகளின் சாராம்சம் வருமாறு:

* தமிழகத்தில், 24,344 ஆரம்ப பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்படும். ஆசிரியர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி அளிக்கப்படும்.

* நம்மை காக்கும் 48, என்ற திட்டத்தின் கீழ், விபத்துக்குள்ளான நான்காயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

* அரசின் இலவச பேருந்துகளில் கடந்த 4 மாதங்களில் 61% அளவிற்கு மகளிர் பயணம் செய்துள்ளனர்.

* ஜனவரி 12ம் தேதி உலகத்தமிழ் நாளாக கொண்டாடப்படும்.

* வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய, மத்திய ஒன்றிய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியை, உடனடியாக விடுவிக்க வேண்டும்.

* தந்தை பெரியார், கலைஞர் கருணாநிதியின் கனவை நனவாக்கும் விதமாக அனைத்து சாதியினரையும் தமிழ்நாடு அரசு அர்ச்சகர்கள் ஆக்கியுள்ளது.

* தமிழக அரசின் நடவடிக்கையால், ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

* நீட் தேர்வு தேவையில்லை என்ற நிலையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது . நுழைவுத் தேர்வுகள் கிராம மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துகிறது. நீட் போன்ற நுழைவு தேர்வுகள் உயர்கல்விக்கு தேவை இல்லை என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது.

*'இல்லம் தேடி கல்வித் திட்டம்' மூலம் தரமான கல்வியை எல்லா குழந்தைகளுக்கும் வழங்க, தமிழக அரசு முனைந்து வருகிறது.

* இயற்கையுடன் இணைந்து வாழும் தமிழகர்களின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில், மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு ஆளுனர் ரவி தனது உரையில் குறிப்பிட்டார்.

Updated On: 5 Jan 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!