/* */

தொடர்ந்து பெய்யும் கனமழை: 5 மாவட்டங்களில் 10 நிவாரண முகாம்கள்

5 மாவட்டங்களில் 314 நபர்கள் 10 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

தொடர்ந்து பெய்யும் கனமழை: 5 மாவட்டங்களில் 10 நிவாரண முகாம்கள்
X

தீவிரமடைந்து வரும் வடகிழக்கு பருவமழையால் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 314 நபர்கள் 10 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு

1.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 43 குடும்பங்களைச் சார்ந்த 128 நபர்கள் 5 நிவாரண முகாம்களிலும்,

2. திருவண்ணாமலை மாவட்டத்தில், 15 குடும்பங்களைச் சார்ந்த 71 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும்,

3. செங்கல்பட்டு மாவட்டத்தில், 20 குடும்பங்களைச் சார்ந்த 79 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும்,

4. திருவள்ளூர் மாவட்டத்தில் 9 குடும்பங்களைச் சார்ந்த 36 நபர்கள் 1 நிவாரண முகாமிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.

சேத விபரம்:

கடந்த 24 மணி நேரத்தில், சென்னை , தேனி, மதுரை மாவட்டங்களில் 4 நபர்கள் உயிரிழந்துள்னர். மேலும், 16 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது. 237 குடிசைகள் பகுதியாகவும், 26 குடிசைகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 263 குடிசைகள் சேதமடைந்துள்ளன. 65 வீடுகள் பகுதியாகவும், 5 வீடுகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 70 வீடுகள் சேதமடைந்துள்ளன.

Updated On: 8 Nov 2021 7:24 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு