/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

தமிழக நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
X

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்டவைகளுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. அந்த வகையில் 21 மாநகராட்சிகளில் உள்ள 1,374 பதவிகளுக்கும், 138 நகராட்சிகளில் 3,843 பதவிகளுக்கும், 490 பேரூராட்சிகளில் 7,621 பதவிகளுக்கும் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுக்காக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பணி கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி தொடங்கி கடந்த 4-ந் தேதி வரை நடைபெற்றது. மாநகராட்சிகளின் 1,374 பதவிகளுக்கு போட்டியிட 14 ஆயிரத்து 701 வேட்புமனுக்களும், நகராட்சியில் உள்ள 3,843 இடங்களுக்கு 23 ஆயிரத்து 354 வேட்புமனுக்களும், போரூராட்சிகளில் உள்ள 7,621 இடங்களுக்கு 36 ஆயிரத்து 361 வேட்புமனுக்கள் என மொத்தம் 74 ஆயிரத்து 416 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வேட்புமனுக்கள் பரிசீலனை முன்தினம் நடைபெற்றது. அவ்வாறு பரிசீலிக்கப்பட்ட வேட்புமனுக்களில், மாநில தேர்தல் ஆணையத்தின் விதிப்படி இல்லாத வேட்புமனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதைப்போல் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.க., புதியநீதி கட்சி, சமூக சமத்துவ படை உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. மேலும் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., சமத்துவ மக்கள் கட்சி, ஆம் ஆத்மி, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், விஜய் மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று (திங்கட்கிழமை) மதியம் 3 மணி வரை கால அவகாசம் வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. அந்தவகையில் ஒரு கட்சியின் முக்கிய வேட்பாளரின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அக்கட்சியின் மாற்று வேட்பாளர்களின் வேட்புமனு தானாக ரத்து செய்யப்படும். இதையடுத்து திரும்ப பெறப்பட்ட வேட்புமனுக்களை தவிர்த்து இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும்.

இதைத்தொடர்ந்து வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெறும். இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அவர்களது சின்னங்களே ஒதுக்கப்படும். சுயேச்சை வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையமே சின்னத்தை ஒதுக்கீடு செய்யும். இந்த நிலையில் இரு வேட்பாளர்கள் ஒரே சின்னம் வேண்டும் என கோரிக்கை வைத்தால், குலுக்கல் முறையில் அந்த சின்னம் ஒருவருக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

வரும் 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதியப்பட்ட வாக்குகள் வருகிற 22-ந் தேதி எண்ணப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Updated On: 7 Feb 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்