/* */

கள ஆய்வில் முதல்வர் திட்டம்: வேலூரில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

திட்டத்தை தொடங்கி வைக்க வேலூருக்கு வழக்கமாக காரில் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த முறை ரயிலில் செல்கிறார்

HIGHLIGHTS

கள ஆய்வில் முதல்வர் திட்டம்: வேலூரில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
X

முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் "கள ஆய்வில் முதல்வர்" என்ற புதிய திட்டத்தை மாவட்ட வாரியாக செயல்படுத்த உள்ளார். வேலூரில் பிப்ரவரி 1ம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக அவர் 1ம்தேதி அதிகாலையில் வேலூர் காட்பாடிக்கு ரயிலில் செல்கிறார். அங்கு அவரை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வரவேற்கிறார்கள்.

அன்று காலையில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் சுய உதவிக் குழுக்கள், தொழில் அமைப்புகளின் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் முதலமைச்சர் கேட்டறிகிறார்.

அன்று மாலை 4 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துறை துணைத் தலைவர், காவல் துறை தலைவர் (வடக்கு) ஆகியோருடன் அந்தந்த மாவட்டங்களின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார்.

இந்த ஆய்வின் மற்றொரு பகுதியாக வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும் முக்கிய துறை சார்ந்த அரசு செயலாளர்கள், அமைச்சர்கள், துணைத் தலைவர்கள் ஆகியோர் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் கள ஆய்வு மேற்கொள்கிறார்.

கள ஆய்வில் கிடைக்க பெறும் தகவல்களின் அடிப்படையில், திட்டச் செயல்பாடுகள் குறித்து பிப்ரவரி 2 நடைபெறும் மாவட்ட ஆட்சியர்கள் பங்கு பெறும் ஆய்வுக் கூட்டத்தின் போது முதலமைச்சர் முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, முக்கிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறை தலைவர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

முதலமைச்சரின் வேலூர் பயணம் குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கமாக வேலூருக்கு காரில் செல்வது வழக்கம். இந்த முறை அவர் ரெயிலில் செல்கிறார். 1ம் தேதி காலையில் வேலூருக்கு செல்லும் முதலமைச்சர், காட்பாடியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் ரூ. 700 கோடி மதிப்பில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மாலை 5 மணியளவில் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்று மாணவர் விடுதி, ஆராய்ச்சி பூங்கா உள்ளிட்ட கட்டிடங்களை திறந்து வைக்கிறார். அன்று இரவு வேலூர் சரக சட்டம்-ஒழுங்கு குறித்தும் ஆய்வு மேற்கொள்கிறார்.

பிப்ரவரி 2ம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமல ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு மேற்கொண்டு விட்டு அன்று மதியம் முதலமைச்சர் சென்னை திரும்புகிறார் என்ற கூறினார்

Updated On: 30 Jan 2023 3:43 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...