/* */

நெல்லையில் ரூ.15 கோடியில் அருங்காட்சியகம்: முதல்வர் அறிவிப்பு

நெல்லையில் ரூபாய் 15 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார்

HIGHLIGHTS

நெல்லையில் ரூ.15 கோடியில் அருங்காட்சியகம்: முதல்வர் அறிவிப்பு
X

தமிழக முதல்வர் ஸ்டாலின்

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வௌியிட்டார்.

அதன்படி, தமிழர் நாகரீகம் பண்டைய நாகரீகம் என்பதற்கான அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள் உள்ளன. சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி தற்போது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. செங்கல் கட்டுமானம், தங்க அணிகலன்கள், பானைகள் உள்ளிட்டவை அங்கு கண்டறியப்பட்டுள்ளன.

கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கீழடி, கொற்கை, சிவகளை உள்ளிட்ட இடங்களில் தற்போது தொல்லியல் ஆய்வு நடைபெற்று வருகிறது. கி.மு. 6ம் நூற்றாண்டிற்கு முன்பாகவே கொற்கை துறைமுகம் செயல்பட்டுள்ளது. வெளிநாடுகளுடனும் தமிழர்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது. ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் கடல் வணிகம், முத்து குளித்தல் எனப்பல விஷயங்கள் அகழாய்வில் தெரியவந்துள்ளது.

எனவே தமிழ் பண்பாட்டை அறிய தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன்தொடர்ச்சியாக, நெல்லையில் ரூபாய் 15 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Updated On: 9 Sep 2021 11:52 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்