/* */

முதல்வர் ஸ்டாலின் - நடிகர் பாக்யராஜ் சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க புதிய நிர்வாகிகள், சங்கத்தின் தலைவர் திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ், செயலாளர் லியாகத் அலிகான், பொருளாளர் பாலசேகரன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

HIGHLIGHTS

முதல்வர் ஸ்டாலின் - நடிகர் பாக்யராஜ் சந்திப்பு
X

தமிழக முதல்வர் ஸ்டாலினை, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் கே.பாக்யராஜ், செயலாளர் லியாகத் அலிகான், பொருளாளர் பாலசேகரன் ஆகியோர் சந்தித்தனர்.

அதன்பின், செய்தியாளர்களிடம் பாக்யராஜ் கூறியதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்தினால் எம்.ஜி.ஆர் புரட்சி நடிகராகவும், சிவாஜி நடிகர் திலகமாகவும் உருவாக முடிந்தது. நான் தனிப்பட்ட முறையில் கருணாநிதியின் எழுத்தை அதிகம் ரசிப்பவன். என்னுடைய எழுத்தை அதிகம் மதித்தவர் கருணாநிதி. அவருடனான நட்பு நீண்ட காலமாக இருந்தது. கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகிய இரண்டு பேரின் நிகழ்வுகளிலும் சரிசமமாக பங்கேற்றவன் நான்.

சமீப காலமாக எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைந்துள்ளது. கதை இலாகா என்பதே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பிறமொழி படங்களின் தாக்கம் இருப்பதால், அதை நோக்கி சில இயக்குநர்கள் படம் எடுக்கின்றனர். வெற்றி மாறன் போன்றோர் நாவலை மையப்படுத்தி சிறப்பான படங்களை எடுகின்றனர். தமிழ்த் திரை உலகில் எழுத்தாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது உண்மைதான். தமிழ் நடிகர்கள் படங்கள் ஆந்திராவிலும், இந்தியிலும் அதிகம் ஓடும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 17 Sep 2022 3:55 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்