Begin typing your search above and press return to search.
கொரோனா பீதி: வடமாநிலத்தவர்களால் ஸ்தம்பித்தது சென்ட்ரல்
கொரோனா பீதி காரணமாக சொந்த ஊர் செல்ல ஏராளமான வடமாநிலத்தவர் குவிந்ததால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஸ்தம்பித்தது
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் நேற்று தமிழக அரசால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி தமிழகம் முழுவதும் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை முழு ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கு அச்சம் காரணமாக சொந்த ஊர் செல்வதற்காக குழந்தைகளுடன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர்.
இதனால் ரயில் நிலையமே கூட்டம் வழிந்து காணப்படுகிறது.