/* */

401 New Cases Of Corona In TN; தமிழகத்தில் இன்று புதிதாக 401 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 401 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

401 New Cases Of Corona In TN; தமிழகத்தில் இன்று புதிதாக 401 பேருக்கு கொரோனா
X

கோப்பு படம்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி, இன்று‌ (ஏப்.,11) செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 401 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் ஆண்கள் 215 பேர், பெண்கள் 186 பேர் அடங்குவர். சிங்கப்பூரில் இருந்து வந்த‌ பயணி ஒருவருக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கும், இந்தோனேசியாவில் இருந்து வந்த ஒரு பயணிக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

சென்னையில் அதிகபட்சமாக 110 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 46 பேரும், கோவை மாவட்டத்தில் 41 பேரும், சேலத்தில் 23 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 22 பேரும் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 198 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 301 ஆக உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

Updated On: 11 April 2023 3:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு