Begin typing your search above and press return to search.
அண்ணாமலையார் கோவிலில் அமாவாசை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்க கூடிய அண்ணாமலையார் திருத்தலத்தில் பஞ்ச பருவ உற்சவங்களில் ஒன்றான அமாவாசை உற்சவம் நடைபெற்றது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்ககூடிய அண்ணாமலையார் ஆலயத்தில் பஞ்ச பருவ உற்சவங்களில் ஒன்றான அமாவாசை உற்சவம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. நேற்று மாலை சின்ன சந்திரசேகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு நாலாம் பிரகாரம் வலம் வந்து அமாவாசை மண்டபத்தில் சந்திரசேகரர் எழுந்தருளினார். இந்த உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டார்கள்.