/* */

புத்துணர்வு முகாமுக்கு கிளம்பும் யானைகள்

புத்துணர்வு முகாமுக்கு கிளம்பும் யானைகள்
X

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நாளை முதல் நடைபெறும் யானைகள் சிறப்பு புத்துணர்வு முகாமிற்கு தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் இருந்து யானைகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில், யானைகள் புத்துணர்வு முகாம் நாளை முதல் 48 நாட்கள் நடைபெற உள்ளது. யானைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்குவதுடன் மட்டுமல்லாது யானை பாகன்களுக்கும் யானையை பராமரிப்பது குறித்து சிறப்பு பயிற்சிகள் முகாமில் வழங்கப்படும்.

இதற்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலட்சுமி, சிறப்பு பூஜை செய்து லாரி மூலம் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி சிறப்பு பூஜை செய்யப்பட்டு யானைகள் புத்துணர்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது போல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் கோவில் யானை கோமதி, யானைகள் புத்துணர்வு முகாமிற்கு சென்றது. முன்னதாக யானை கோமதி கோவிலுக்கு வந்தவர்களுக்கு ஆசி வழங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதா இன்று அதிகாலை லாரி மூலம் புத்துணர்வு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டது. முன்னதாக திருக்கோவில் சார்பில் யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

Updated On: 8 Feb 2021 5:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  2. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  3. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  4. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  5. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  6. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  7. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  8. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  9. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!