/* */

அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
X

தண்ணீர் தேடி தாமரைக்கரை குளத்துக்கு வந்த காட்டு யானை.

Erode News, Erode Today News, Erode Live Updates - அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. தற்போது, நிலவும் கடும் வெயில் காரணமாக வனப்பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்தில் உள்ள விலங்குகள், தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தாமரைக்கரை குளத்துக்கு வந்தது. பின்னர், அந்த காட்டு யானை அங்குள்ள தண்ணீரை குடித்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், குளத்தில் ஒரு மணி நேரம் படுத்து கிடந்தது.

இதைக் கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களுடைய செல்போனில் காட்டு யானையை புகைப்படம் எடுத்தனர். ஆனால் காட்டு யானை எதையும் கண்டுக்கொள்ளாமல் குளத்துத் தண்ணீரில் படுத்துக் கிடந்தது.

வனத்துறை யானைகளுக்கு வனத்துக்குள் தண்ணீர் கிடைப்பதற்கு வழிவகை செய்யவேண்டும். யானைகள் மட்டும் அல்லாமல், பிற காட்டு விலங்குகளும் கோடைகாலத்தில் தண்ணீர் இல்லாமல் அலைந்து திரியும்.இதை கருத்திற்கொண்டு வனத்துறை வனத்துக்குள் தண்ணீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்று விலங்குகள் னால ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 7 May 2024 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  4. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  7. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்