/* */

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு  ரத்து :  அமைச்சர் செங்கோட்டையன்  அறிவிப்பு
X

அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார் .

64-வது தேசிய பள்ளிகள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் ஆகியோர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது ,

ஊராட்சி , பேருராட்சி பகுதிகளில் விளையாட்டை ஊக்குவிக்க 67 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. அரையாண்டு தேர்வை பொறுத்தவரை அரசு பள்ளிகள் , அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தனியார் பள்ளிகள் மட்டும் தேவைப்பட்டால் ஆன்லைனில் தேர்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசுப் பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லை என்ற நிலை இல்லை என்றும் , மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன் , பாடத்திட்டங்கள் 1ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை 50 சதவீதமும் , 10 , 11 ,12 வகுப்பு 35 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற மாநில மாணவர்களுடன் போட்டியிட வேண்டிய சூழல் இருப்பதால் 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு 65சதவீதம் பாடம் நடத்த வேண்டி இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Updated On: 16 Dec 2020 4:47 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  5. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  7. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  9. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  10. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை