/* */

குத்தாலத்தில் வீட்டு முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடிய இருவர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் வீட்டு முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

குத்தாலத்தில் வீட்டு முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடிய இருவர் கைது
X

மயிலாடுதுறை அருகே ஆட்டோ திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருணகிரிநாதர் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முத்தலிப் (35). இவர் கடந்த 14-ஆம் தேதி இவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் ஆட்டோ மாயமானது குறித்து முத்தலிப் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ், தலைமைக் காவலர்கள் நரசிம்மபாரதி உள்ளிட்ட தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையத்தை சேர்ந்த அலாவுதீன் (31)., நன்னிலம் தாலுகா ஆதலையூர் கிராமத்தைச் சேர்ந்த சித்திக் (31) ஆகிய இருவரும் ஆட்டோவை திருடிச் சென்று திருச்சியில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அலாவுதீன், சித்திக் இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்கள் திருடி விற்பனை செய்த ஆட்டோவை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Updated On: 30 Jan 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?