/* */

கீரனூர் கிராமத்தில் தேரை தலையில் தூக்கி நூதன வழிபாடு

மயிலாடுதுறை, கீரனூரில் தலையில் தேரை தூக்கி நூதன வழிபாடு.

HIGHLIGHTS

கீரனூர் கிராமத்தில் தேரை தலையில்  தூக்கி நூதன வழிபாடு
X

கீரனூர் கிராமத்தில் தேரை தலையில் தூக்கி நூதன வழிபாடு செய்தனர். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவாரூர் மாவட்டம், கீரனூரில் பழமையான அய்யனார், செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இக் கோயில்களில் ஆண்டுதோறும் பூச்சொரிதல், எல்லை தேர்பவனி, தேர் திருவிழா, தீமிதி ஆகிய உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு உற்சவம் கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சுவாமி அம்பாள் வீதிஉலா நடைபெற்றது. இந்நிலையில் முக்கிய திருவிழாவான தேர்த் திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த தேர் திருவிழா மற்ற கோயில்களை போல் அல்லாமல், நூதன முறையில் தேரினை தலையில் தூக்கி 10 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள ஊர் ல்லையான வயல் பகுதியை சுற்றிவந்து மீண்டும் கோவிலை அடைவார்கள். விவசாயம் செழிக்க வேண்டி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தேர் திருவிழாவை, உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Updated On: 1 April 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!