/* */

மயிலாடுதுறையில் திடீர் மழை; கலக்கத்தில் நெல் விவசாயிகள்

நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக அடுக்கி வைத்துள்ள விவசாயிகளுக்கு இந்த பெய்த மழை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில்  திடீர் மழை;  கலக்கத்தில் நெல்  விவசாயிகள்
X

மயிலாடுதுறையில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் கலக்கம்

மயிலாடுதுறையில் காலைமுதல் திடீர் மழை பெய்ததால்; அறுவடைக்கு தயாராக உள்ள விவசாயிகளும் அறுவடை செய்த நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைத்துள்ள விவசாயிகளும் கலக்கமடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை தொடங்கி திடீர் மழை பெய்தது. மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோயில், மணல்மேடு, குத்தாலம், மங்கைநல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை லேசான மழையாக தொடங்கி தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. காலை 7 மணிக்கு பின்னரே பலத்த மழை தொடங்கியதால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. சில இடங்களில் சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், பலத்த மழை தொடர்ந்தால் பயிர்கள் சாய்ந்து விடும் அபாயம் உள்ளது. இதேபோல பல்வேறு இடங்களில் அறுவடை செய்யப்பட்ட சம்பா நெல்மணிகளை விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக அடுக்கி வைத்துள்ளனர். விவசாயிகளுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு மணிநேரத்தை கடந்து பெய்த மழை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 11 Feb 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  3. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  4. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  5. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  6. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  7. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  10. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...