/* */

மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவிகள் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீனம் கல்லூரி மாணவிகள் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவிகள் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி
X

மயிலாடுதுறை அருகே மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் மாணவிகள் மற்றும் சித்தர்காடு ஊராட்சி சார்பில் பொதுமக்களிடம் மஞ்சப்பையை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினவேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மஞ்சப்பை பயன்பாடு, வீட்டுத் தோட்டம் அமைப்பதன் பயன்கள் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து அளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி கையில் பதாகைகள் ஏந்தி ஆதீனம் கலைக் கல்லூரி மாணவிகள் ஊராட்சியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஊராட்சி அலுவலகத்தை வந்தடைந்தனர். இதில் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் சி. சுவாமிநாதன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Dec 2021 3:01 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!