/* */

சீர்காழி: அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சீர்காழி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சீர்காழி: அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
X

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தில்லைவிடங்கன் பகுதியை சேர்ந்தவர் அபிமணி(வயது21.).இவர் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.இயற்கைஉபாதை கழிப்பதற்கு வீட்டின் அருகேயுள்ள வயல் பகுதிக்கு சென்றுள்ளார்.எதிர்பாராத விதமாக அங்கு அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியை மிதித்து தூக்கி வீசப்பட்டார்.இவ்விபத்தில் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த அபிமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு 108 வாகனம் மூலம் கொண்டு சென்றனர். அபிமணியை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன், மின் வாரிய பொறியாளர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 10 May 2022 1:56 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  6. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  7. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  8. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  10. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!