/* */

மயிலாடுதுறை: மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் காணாமல் போய் மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை: மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
X

மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார் மயிலாடுதுறை எஸ்.பி. சுகுணாசிங்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 14 காவல் நிலையங்களில் செல்பொன் தொலைந்துவிட்டதாக கடந்த 3 மாதத்தில் 100க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட எல்லைக்குள் தொலைந்துபோன செல்போன்களை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவிட்டார்.

மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையில் சைபர்கிரைம் போலீஸ் தலைமை காவலர் சுதாகர் மற்றும் காவலர்கள் ரவிச்சந்திரன், எழிலன் ஆகியோரின் தீவிர முயற்சியில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான 110 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உரிமையாளர்களால் அடையாளம் காண்பிக்கப்பட்ட செல்பொன்களை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் ஒப்படைத்தார். பின்னர் பொதுமக்களிடம் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், செல் போன்கள் தொலைந்து போனாலும் திருடப்பட்டால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் செய்து சி.எஸ்.ஆர். மனு காப்பியை வாங்கிக் கொண்டால், செல்போன்கள் ஒப்படைப்பதற்கு சுலபமாக இருக்கும் என்றும், மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல் கடத்தல் கஞ்சா குட்கா, கள்ளச்சாராய விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தர வேண்டும் என்றும், தகவல்தரும் பொதுமக்கள் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் குற்றமில்லாத மயிலாடுதுறை மாவட்டமாக உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.

Updated On: 3 Jan 2022 4:40 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்