Begin typing your search above and press return to search.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை ஆரம்பம்
புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பெய்ய துவங்கியுள்ளது.
HIGHLIGHTS
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வானிலை ஆய்வு மையம் டெல்டா மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் வங்க கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழையும் லேசான மழையும் விட்டு விட்டு பெய்து வருகிறது. மயிலாடுதுறை செம்பனார்கோவில், ஆக்கூர், திருக்கடையூர், பொறையார், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழையும், லேசான மழையும் விட்டுவிட்டு பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.