/* */

குத்தாலம் தேரழுந்தூர் கீழையூர் பொன்னம்மா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குத்தாலம் தேரழுந்தூர் கீழையூர் கிராமம் பொன்னம்மா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

குத்தாலம் தேரழுந்தூர்  கீழையூர் பொன்னம்மா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
X

குத்தாலம் அருகே  தேரழுந்தூர் கீழையூர் பொன்னம்மா காளியம்மன்  கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரழுந்தூர் கீழையூர் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீபொன்னம்மா காளியம்மன் கோயில் உள்ளது. கோயிலில் கிராம மக்களின் முயற்சியால் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

கும்பாபிஷேக விழா கடந்த திங்கட்கிழமை விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று பூர்ணாஹுதி செய்யப்பட்டது. கும்பாபிஷேக தினமான இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை செய்யப்பட்டு, மஹா பூர்ணாகுதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலைச் சுற்றி வந்து விமானத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத மேளதாளங்கள் வாசிக்க மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தனர்.

Updated On: 27 Oct 2021 10:13 AM GMT

Related News