/* */

போலியோ சொட்டு மருந்து முகாமை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தொடங்கினார்

போலியோ சொட்டு மருந்து முகாமை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தொடங்கினார்

HIGHLIGHTS

போலியோ சொட்டு மருந்து முகாமை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தொடங்கினார்
X

நிவேதா முருகன் எம்.எல்.ஏ.  போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.

இன்று நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 582 முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட 75,964 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. செம்பனார்கோவில் வட்டாரத்தில் சுமார் 17 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

முதற்கட்டமாக தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் நிவேதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கார்த்திக் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற முகாமில் பூம்புகார் சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், பள்ளி முதல்வர் சுகுண சங்கரி, மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 27 Feb 2022 8:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது