/* */

பேரறிவாளன் விடுதலை: மயிலாடுதுறையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலை கழகத்தினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்

HIGHLIGHTS

பேரறிவாளன் விடுதலை: மயிலாடுதுறையில்  இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
X

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்று மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலை கழகத்தினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் கடந்த31 ஆண்டுகளாக சிறையில் இருந்தார். அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரது தாயார் அற்புதம்மாள் சட்டப் போராட்டம் நடத்தி வந்த நிலையில் பல்வேறு அமைப்பினர் அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பினை வரவேற்கும் விதமாக மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே திராவிடர் விடுதலை கழகத்தினர்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசை பாராட்டியும், தமிழக ஆளுநரை பதவி விலகக் கோரியும் கோஷங்களை எழுப்பினர். இதில் திராவிடர் விடுதலை கழகத்தினர் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் சிறையில் உள்ள முருகன், நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 18 May 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு