Begin typing your search above and press return to search.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இ.கம்யூ., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் இடுப்பையன் தலைமையில் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, டெல்லியில் தொடர்ந்து 200 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 3 வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்த சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் கொள்கைகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.