/* */

சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

19 பேர் பணி நீக்கம் செய்ததைக் கண்டித்து சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள்

நேரடி நெல் கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்கள் 19 பேரை பணி நீக்கம் செய்த நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து, மயிலாடுதுறை மாவட்ட சி.ஐ.டி.யு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா கருப்பூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றிவந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 19 பேர் நடப்பு பருவத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களை பணிநீக்கம் செய்ததற்கு உரிய காரணத்தை நுகர்பொருள் வாணிபக் கழகம் கூறவில்லை. இதனைக் கண்டித்தும், மீண்டும் அவர்களை அதே பணியில் பணியமர்த்தக் கோரியும், மயிலாடுதுறை சித்தர்காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான நவீன அரிசி ஆலை முன்பு, மயிலாடுதுறை மாவட்ட சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்க தலைவர் ராஜாராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி பேசி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Updated On: 23 Aug 2021 12:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை