/* */

மயிலாடுதுறை: பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நில ஆக்கிரமிப்பு அகற்றம்

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் 7.2 கி.மீட்டர் தொலைவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவக்கம்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை: பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நில ஆக்கிரமிப்பு அகற்றம்
X

ஆக்கிரமிப்பு பணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள். 

மயிலாடுதுறை தாலுக்கா மூவலூரில் காவிரியின் கிளை ஆறான பழங்காவேரி பிரிந்து சுமார் 7.2 கிலோமீட்டர் சென்று மயிலாடுதுறை நகரில் முடிவடைகிறது. இந்த இடத்தில் பல்வேறு இடங்களில் வீடுகள், காம்பவுண்ட் சுவர்கள், வேலிகள் அமைத்து ஆக்கிரமிப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாய இடைக்கால உத்தரவின்பேரில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று தொடங்கியது.

மூவலூர் தலைப்பில் இருந்து சித்தர்காடு வரை இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில் வீடுகளை தவிர்த்து 24 இடங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்த காம்பவுண்டு சுவர்கள், வேலிகள் ஆகிய ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர் ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றினர். இப்பணிகளை மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, வட்டாட்சியர் ராகவன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கண்ணதாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இப்பணி தொடர்ந்து நடைபெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 4 Dec 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’