/* */

மயிலாடுதுறை அரசு வழக்கறிஞருக்கு மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாராட்டு

மயிலாடுதுறை அரசு வழக்கறிஞருக்கு மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அரசு வழக்கறிஞருக்கு மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாராட்டு
X

மயிலாடுதுறை அரசு வழக்கறிஞர் ராமசேயோனுக்கு  மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.

கடந்த 03.01.2020 அன்று மயிலாடுதுறை மாவட்டம் பாகசாலை காவல் நிலைய எல்லையில் உள்ள கண்டமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே சாமிதுரை கொலை வழக்கு தொடர்பாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு பின்னர் வழக்கு விசாரனை மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இவ்விசாரனையில் அரசு தரப்பு வழக்கறிஞராக ராம.சேயோன் ஆஜரானார். இவ்வழக்கின் விசாரனை முடிந்து ஏப்ரல் 7-ஆம் தேதி குற்றவாளிகள் இருவருக்கும் மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ராம.சேயோனை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் உட்கோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு கூட்டம் நடத்திய போது, நேரில் சந்தித்து, வழக்கிற்குரிய தீர்ப்பு நகலை வழங்கினார். அப்போது சிறப்பாக வழக்கினை நடத்தி குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த அரசு வழக்கறிஞரை காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

Updated On: 10 April 2022 4:32 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!