/* */

மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் கோயிலில் 38ம் ஆண்டு பால்குட விழா

மயிலாடுதுறையில், பிரசித்தி பெற்ற பிரசன்ன மாரியம்மன் கோயிலில், 38-வது ஆண்டு பால்குட விழா நடைபெற்றது

HIGHLIGHTS

மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் கோயிலில் 38ம் ஆண்டு பால்குட விழா
X

பிரசன்ன மாரியம்மன் கோயிலில்,  தை மாத கடைவெள்ளியை முன்னிட்டு 38-வது ஆண்டு பால்குட விழாவில், பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் ஊர்வலம் நடைபெற்றது.

மயிலாடுதுறை வண்டிக்காரத் தெருவில், பிரசித்தி பெற்ற பிரசன்ன மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் தை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, 38-வது ஆண்டு பால்குட திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்திலிருந்து பால்குடங்களை எடுத்தும், உடலில் அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

வழியெங்கும் நடைபெற்ற பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டம் மற்றும் காளியாட்டத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். பின்னர் பிரசன்ன மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

Updated On: 11 Feb 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்