/* */

உடைப்பு அபாயத்தால் கொள்ளிடம் கரை கண்காணிப்பு- அமைச்சர் மெய்யநாதன்

வெள்ளப்பெருக்கால் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் கொள்ளிடம் கரை கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

HIGHLIGHTS

உடைப்பு அபாயத்தால் கொள்ளிடம் கரை கண்காணிப்பு- அமைச்சர் மெய்யநாதன்
X
மயிலாடுதுறையில் அமைச்சர் மெய்யநாதன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் லலிதா முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்க கூடிய மக்களை பாதுகாப்பது மற்றும் போர்க்கால அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில்

ஆறுகளில் உள்ள முகத்துவார பகுதிகளில் அடைப்புகளை சரி செய்து தண்ணீரை வடிகால் வாய்க்காலுக்கு செல்லக் கூடிய வகையில் வசதி ஏற்படுத்தப்படவுள்ளதாகவும். மழை நீர் சூழ்ந்து இருக்கும் குடியிருப்பு பகுதியில் மின் மோட்டார்களை கொண்டு தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு முகாம்கள் ஏற்படுத்தி பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும். தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் 80 ஆயிரம் கனஅடி உபரி நீர் கடலுக்கு செல்வதால் கரைகள் உடைப்பு ஏற்படக்கூடிய அளக்குடி பகுதி தொடர்ந்து அதிகாரிகளைக் கொண்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Updated On: 29 Nov 2021 6:17 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  9. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!