/* */

ரயிலில் கஞ்சா கடத்திய 3 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்

மயிலாடுதுறையில், ரயிலில் கஞ்சா கடத்திய 3 பேரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ரயிலில் கஞ்சா கடத்திய 3 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்
X

கடத்திவரப்பட்ட கஞ்சா பொட்டலங்கள். 

மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாஸ்கரன், சதீஷ்குமார், சரவணன், பஞ்சவர்ணம், ஆகியோர் திருச்செந்தூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்வே பாதுகாப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ரயில் பெட்டியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த பேக்குகளை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

மேலும் ரயிலில் சந்தேகப்படும் வகையில் பேக்குகள் அருகே இருந்த திருச்சி தாராநல்லூரை சேர்ந்த சிவசங்கர் (25) அவரது மனைவி சத்யா ( 20), சரபேஸ்வரர் (19) ஆகியோரை போலீசார் விசாரணை செய்த போது, முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்துள்ளனர். உடன் அவர்களை மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் வைத்து விசாரணை செய்தபோது, 23 பாக்கெட்டுகளில் 46 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது/

இதுகுறித்து மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவசங்கர். சத்தியசீலன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர் . பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்தவர்களை தஞ்சாவூர் தமிழ்நாடு ரயில்வே போலீஸாரிடம் மேல் விசாரணைக்காக ஒப்படைத்தனர்.

Updated On: 5 April 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்