/* */

தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்ததற்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்ததற்கு தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்ததற்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து
X

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இந்த அறிவிப்புக்கு இந்தியாவின் தொன்மை வாய்ந்த ஆதீனங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது:

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்த முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கட்கு நமது நல்லாசிகள். தமிழைப் போற்றும் முகமாக தமிழுக்கு உயர்வளிக்கும் நல்உள்ளத்தோடு சிறந்த அறிவிப்பை அறிவித்திருப்பது பாராட்டுதலுக்குரியது. தமிழுக்கு தொண்டு செய்வோர் என்றும் உயர்வு பெறுவர். தமிழுக்கு ஒல்லும் வகையான் உயர்வளிக்கும் பணி மேலும் தொடர நமது நல்லாசிகள் என அவர்தம் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

Updated On: 19 Dec 2021 7:52 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  2. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  3. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  4. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  10. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு