/* */

மத்திய அரசின் ஆதார விலையைவிட பருத்திக்கு கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற மறைமுக பருத்தி ஏலத்தில் மத்திய அரசின் ஆதார விலையைவிட கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

HIGHLIGHTS

மத்திய அரசின் ஆதார விலையைவிட  பருத்திக்கு கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
X

செம்பனார் கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ள பருத்தி முட்டைகள்  

மயிலாடுதுறை மாவட்டத்தில் 4586 ஹெக்டேர் நிலப்பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, பருத்தி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் பருத்தியை மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில் மற்றும் சீர்காழியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விற்பனை செய்து வருகின்றனர். அவ்வகையில், மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாகை விற்பனைக்குழு செயலாளர் ரமேஷ் தலைமையில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் 3,100 குவிண்டால் பருத்தியை விற்பனைக்காக கொண்டுவந்தனர்.

இந்த ஏலத்தில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாருர், தேனி, சத்தியமங்கலம், ஆத்தூர், விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த 13 வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். இந்த ஏலத்தில் பருத்தி மத்திய அரசின் அதிக பட்ச ஆதாரவிலை ரூ.5825ஐ விட பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக 7,185 ரூபாய்க்கும், சராசரியாக 6,350 ரூபாய்க்கும் வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். இந்த ஏலத்தில் மொத்தம் 2 கோடி ரூபாய் மதிப்புடைய பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது. மத்திய அரசின் ஆதாரவிலையை விட அதிக விலைக்கு பருத்தி ஏலம் போனதால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் பருத்தி அதிக அளவில் விற்பனைக்கு வருவதால் திறந்த வெளியில் பருத்தியை வைக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கூடுதல் கிடங்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 13 July 2021 5:15 AM GMT

Related News