/* */

மயிலாடுதுறையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்

மயிலாடுதுறையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்
X

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் (பைல் படம்)

நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை சீர்காழி ஆகிய இரண்டு நகராட்சிகளும் தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோவில், குத்தாலம், மணல்மேடு ஆகிய நான்கு பேரூராட்சி பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா மற்றும் தேர்தல் அசம்பாவிதங்களை தடுக்கவும் அமைக்கப்பட்ட 18 தேர்தல் பறக்கும் படைகள் சுழற்சி முறையில் தீவிர ரோந்து பணி மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை நகராட்சியில் பல்வேறு இடங்களில் வாக்காளர்களிடம் வாக்குகளை பெறுவதற்காக பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை நகராட்சியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்த காட்சிகள் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படையினர் 30 வது வார்டில் சார் பதிவாளர் பன்னீர்செல்வம் தலைமையில் தீவிர சோதனை மேற்கொண்டனர். பணம் ஒன்றும் சிக்கவில்லை. பணப் பட்டுவாடா செய்யும் வீடியோ பதிவு கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள பல்வேறு வார்டுகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 18 Feb 2022 2:44 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!